முதல் முறை தாம்பத்தியத்தில் சொதப்பாமல் இருக்கணுமா? அப்ப இத படிங்க..!

Bed Relationship

திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. முதல் முறை தாம்பத்தியம் கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம். அதனால் பயம், பதட்டம் இருக்கலாம். எனவே முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.

உடலுறவு கொள்வதற்கு முன் அதில் இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். மகிழ்ச்சி இருக்க வேண்டும். அது இருந்தால்தான் மற்ற விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லை அதற்காக முன்பே திட்டமிட்டு கருத்தடை உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்துங்கள்.

படுக்கையில் சௌகரியமாக இருங்கள். உங்கள் துணையையும் சௌகரியமாக வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லது. எடுத்ததும் சீறிப் பாயாமல் எனவே கொஞ்சம் விளையாட்டு, குறும்பு என துவங்கினால் அது ஆர்வத்தை தூண்டும். பதட்டம் விலகும்.

இருவரும் பேசிக்கொள்ளுதல் நல்லது. உரையாடல் துணையின் எண்ணத்தை புரிந்துகொள்ள உதவலாம். வலி இல்லா மென்மையான உடலுறவுக்கும் இது வழிவகுக்கும்.

செய்யக் கூடாத விஷயங்கள்

உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கும் என நீங்களாக நினைத்துக்கொண்டு திட்டம் போடாதீர்கள். அவரின் விருப்பதை கேட்டு தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

அதிகமாக கற்பனை செய்தல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஓவராக மனக்கணக்கு போட்டால் பதட்டத்தில் அனைத்தையும் விட்டுவிடுவீர்கள்.

அதிக எதிர்பார்ப்பும் தவறு. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை எனில் மகிழ்ச்சி இருக்காது. எனவே முதல் முறை உடலுறவில் எதிர்பார்ப்புகள் முற்றிலும் தவறு.

முதல் முறை உடலுறவு கொள்ளும்போது புதிய செக்ஸ் நிலைகளை முயற்சிப்பது தவறு. இது துணைக்கு அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். எனவே எளிமையான முறையே சிறந்தது.

பெண்ணாக இருப்பின் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். கருத்தடை உபகரணங்களே போதுமானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!